19 நபர்களிடம் ரூ62 லட்சம் மோசடி
கோவை, மே 13- குறைந்த விலையில் வீடு மற்றும் வீட்டுமனைகளை வாங்கி தருவதாக கூறி 19 நபர்களிடம் சுமார் 62 லட்சத் திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று, குறைந்த விலையில் வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந் தனர். சமூக வலைத்தளத்தில் இந்த விளம்பரத்தை கண்ட கோவையை சேர்ந்த எல்சன் கே ஜோ என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணுகியுள்ளார். அப்போது அவர்கள் கண்ணம்பாளையம் பகுதியில் வீடு இருப்பதாகவும் அதனை குறைந்த விலையில் வாங்கி தருவதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரன் (எ) அன்புசந்திரன், பங்குதார்களான சரவணகுமார், நாகேந் திரன் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சைனி தாமஸ், பிரேம நந்தினி ஆகியோர் தெரிவித்துள்ளனர். பின்னர், வீட்டை காண்பித்துவிட்டு 31 லட்சத்திற்கு அந்த வீட்டை வாங்கிவிடலாம் எனக் கூறி பணத்தை கேட்டுள்ளனர். எல்சனும் முதலில் ரூ25 ஆயிரத்தை டோக்கன் அட்வான்சாக கொடுத்துள்ளார். இதனை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தி உள்ளார், பின்னர், 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நேரில் சென்று கொடுத் துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள் போலி கிரைய ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், நீண்ட நாட்களாகியும், வீட்டை வாங்கித்தரவில்லை. சந்தேகமடைந்த எல்சன் விசாரிக்கையில், கிரய பத்திரம் போலி என்பதும், தான் கொடுத்த பணத்தை சந்திரன், நாகேந்திரன், சரவணகுமார், தர்மேந்திர குமார் உள்ளிட் டோர் பங்கு போட்டதும் தெரிவந்தது. இதனையடுத்து, மோசடி நபர்கள் மீது, எல்சன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரை கைது செய்தனர். தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரனை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவு அருகில் வெள்ளியன்று போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வீடு மற்றும் வீட்டுமனைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 19 நபர்களிடம் இருந்து 62 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். பின்னர், வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இதில் தலைமறைவாக உள்ள இதர குற்றவாளி களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டி படுகொலை
பள்ளிபாளையம், மே 13- பள்ளிபாளையம் அருகே மூதாட்டி ஒருவர், நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரின், கணவர் இறந்தவிட்ட நிலையில் ஆடு,மாடுகளை மேய்ச்சல் செய்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளியன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் மூதாட்டி பழனியம்மாளை பார்க்க சென்றபோது மூதாட்டி நிர்வாண மாக காது அறுக்கப்பட்டும், கழுத்து நெரித்து கொலை செய் யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, பள்ளிபாளையம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி பாளையம் போலீசார் மற்றும் திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் மூதாட்டி பழனியம்மாள் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் குற்றவாளி கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, கடந்த மாதம் ஓடப்பள்ளி, பாப்பம் பாளையம் பகுதியில் சேர்ந்த மூதாட்டி கரும்புக்காட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த்து குறிப்பிடத் தக்கது.
கல்லட்டியில் வாகனத்தின் முன்னே பாய்ந்த புலி
உதகை, மே 13- கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு திடீரென பாய்த புலியால் வாகனத்தில் வந்தவர்கள் அச்சமடைந் தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியாகும். இந்நிலையில் கல்லட்டி மலை பாதையில் 36 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணி கள் சென்ற வாகனத்தின் முன்பு திடீரென ஒரு புலி சாலையை நோக்கி பாய்ந்தது. இதனால் வாகனத்தில் வந்தவர்கள் அச்சமடைந்தனர். நொடி இமைக்கும் நேரத்தில் பாய்ந்த புலியின் வீடியோ வாகனத்தில் பொருத்த பட்டிருந்த கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஒருவர் கைது
தருமபுரி, மே 13- சிறுமியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டத்தில், 13 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆழிவாயன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பலவந்தமாக கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.
தமிழ் மொழி தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு வெகுமதி
திருப்பூர், மே 13 – திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி களில் 12ஆம் வகுப்பு படித்து தமிழ் மொழித் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஏழு மாணவிகளுக்கு மாவட்ட காவல் அலு வலகத்தில் பாராட்டி வெகுமதி அளிக்கப் பட்டது. வெள்ளியன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் முன்னிலையில் முருகம் பாளையம் ஆல்வின் கலர்ஸ் நிறுவனர் கே.வி.கிரி வெகுமதி அளித்து பாராட்டி னார். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி கள் டி.மஹாசுவேதா, வி.டி.நவீனாஸ்ரீ, பொல்லிக்காளிபாளையம் அரசுப் பள்ளி மாணவி பி.பவதாரணி, அய்யன்காளி பாளையம் வி.கே.அரசுப் பள்ளி மாணவி சி. சுபஹிரினி, குண்டடம் அரசுப் பள்ளி மாணவி பி.ஸ்ரீபிரபா, அலங்கியம் அரசுப் பள்ளி மாணவி எஸ்.யாழினி, சரவணபுரம் அரசுப் பள்ளி மாணவி எம்.மருசினி ஆகியோர் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்வில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்சன், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் பொறுப்பு எம்.பக்த வச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையில் மே 19-ஆம் தேதி ரஷ்யக் கல்விக் கண்காட்சி
கோவை, மே 13- ரஷ்ய கல்விக்கண்காட்சி மே 19-ஆம் தேதியன்று கோவை தி கிராண்ட் ரெஜெண்ட் ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் இந்திய மாணவர் களுக்கு ரஷ்யாவில் புகழ்பெற்ற மருத்துவ மற்றும் பொறியில் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான அனுமதி கடிதங்கள் வழங் கப்படவுள்ளன. 2023-24ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும் இடம்பெறும். எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிசன் கிடைக்கும். இக்கல்விக் கண்காட்சியில் வோல்கோ கிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூ க்ளியர் பல்கலைக்கழகம், குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், மாஸ்கோ விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனம், மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக் கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற ரஷ்யப் பல் கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.
இந்தக் கண்காட்சி வரும் மே 16ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஹோட்டலிலும்; மே 17- ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்; மே 18-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட் டலிலும், மே 19-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரெஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடை பெறுகிறது. இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 9282 221 221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிப்பதன் வழியாக ரஷ்ய மருத்துவப் படிப்புத் திட்டங்கள் இந்தியாவில் அங்கீகரிக் கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள தென் னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் செய்தியா ளர்களிடம் பேசுகையில், தேசிய தகுதி - நுழைவுத் தேர்வில் ( நீட்) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./ எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 விழுக்காடு மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.இ. படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி , ஐ.இ. எல்.டி.எஸ் போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை என்றார்.