பொள்ளாச்சி, ஜன.11- பொள்ளாச்சியை அடுத்த பொங் காளியூரில் அதிமுக பிரமுகர்களின் தலையீட்டால் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிலப்பட்டா இன்றி தவித்து வருவதாக திமுக முன் னாள் கவுன்சிலர் ரமேஷ் பொள் ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் அளித் துள்ளார். இம்மனுவில் கூறியிருப்பதா வது;- கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த கோட்டூர் பேரூராட் சிக்குட்பட்டது பொங்காளியூர் கிரா மம். இங்குள்ள 16 ஆவது வார்டில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலோனோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள். இக் குடும்பத்தினர் கோட்டூர் பேரூராட்சி யில் பல ஆண்டுகளாக குடிநீர் வரி மற்றும் வீட்டுவரி செலுத்தி வருகின்ற னர். ஆகவே, தங்களது குடியிருப்பு களை பட்டா நில அளவை செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக வரு வாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதி முக பிரமுகர்களின் தலையீடுகளால் ஆனைமலை வட்டாட்சியர் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இதனை கிடப்பில் போட்டுள்ளனர். ஆகவே, இக்கோரிக்கை தொடர் பாக வருவாய்த் துறையினர், அரசி யல் தலையீடுகளை அனுமதிக்கா மல் நில அளவை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட் டுக் கொண்டுள்ளார்.