ஈரோடு, பிப்.9- ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் நகராட்சி 5 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஏ.சகாதேவன் போட்டியிடு கிறார். இவரது வெற்றிக்கு பாடுபடும் வகையில் தேர் தல் பணிக்குழு அமைப்பு கூட்டம் சிபிஎம் நகர கிளைச் செயலாளர் பி.வாசுதேவன் தலைமையில் நடைபெற் றது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப் பினர் எஸ்.முத்துசாமி, தாலுகா செயலாளர் விஜயகுமார், மூத்த தலைவர் கே. ஆர்.திருத்தணிகாசலம், சிஐடியு மாவட்ட பொருளாளர் கே.மாரப்பன் மற்றும் வேட்பாளர் ஏ.சகா தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தேர்தல் பணிக்குழு தலைவராக க.இரா.திருத்தணிகாசலம், செயலாளராக கே.எம்.விஜய குமார், பொருளாளராக பி.வாசுதேவன் ஆகியோரை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.