லஞ்சம் பெற்ற தாட்கோ ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
உதகை, ஜுலை 18- தாட்கோ மூலம் கடன் உதவி வழங்க ரூ10 ஆயிரம் லஞ்ச பெற்ற வழக்கில் உதகை தாட்கோ அலுவலக கணக்காள ருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காத்தாடி மட்டம் பகுதியை சார்ந்த சுரேஷ் என்பவர் வாடகை கார் வாங்க தாட்கோ மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது கடன் உதவி வழங்க கணக்காளர் பிரபாகரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார். அவருக்கு இடைத்தரகராக செல்வராஜ் என்ப வர் செயல்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கு உதகையில் உள்ள சார்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதன் தீர்ப்பு திங்களன்று வழங்கப்பட்டது. இதில் கணக்காளர் பிரபாகர னுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதே போல ஏஜெஷ் டாக செயல்பட்ட செல்வராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கபட்டது.
சமூகநலத்துறையில் வேலை வாய்ப்பு
ஈரோடு, ஜுலை 18- தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல் பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பல்நோக்கு உதவியா ளர் தொழில்நுட்ப நிர்வாகி மற்றும் இரவுக்காவலர் (பெண்) பணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள நபர்கள் மட்டும் விண் ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி www.erode.nic.in யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியரக 6 ஆவது தளத்தில் 10.08.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங் களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தாட்கோ மூலம் ரூ.20.85 கோடி கடன் வழங்க இலக்கு
கோவை, ஜூலை 18- கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2022 - 2023 நிதியாண்டில் 984 நபர்களுக்கு ரூ.6.26 கோடி மானியத்து டன் கூடிய ரூ.20.85 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் தாட்கோ மூலம் பல்வேறு பொருளா தார மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 30 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் வரை மானியத்து டன் கூடிய கடனுதவியும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு நில வளம் மேம்படுத்து தல், பம்பு செட் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல் முறை நீர் பாசனம் அமைத்தல் ஆகியவற்றிற்கு மானியத்து டன் கூடிய கடன் உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக் கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் கடனுதவி அளிக் கும் திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2021 - 2022 ஆம் நிதியாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.66.96 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.23 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 34 நபர்களுக்கு ரூ.56.36 லட்சம் மானி யத்துடன் கூடிய ரூ.1.87 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட் டத்தின் கீழ் 360 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.50 கோடி கடனுதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு ரூ.1.98 கோடி மானியத்துடன் கூடிய ரூ.6.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2022 -2023 ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வாங்குதல் மற்றும் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 18 நபர்களுக்கு ரூ.49.50 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.1.65 கோடி கடனுதவியும், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 156 நபர்களுக்கு ரூ.2.16 கோடி மானியத்துடன் கூடிய ரூ.5.20 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 114 நபர்களுக்கு ரூ.2.16 கோடி மானி யத்துடன் கூடிய ரூ.7.20 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத் தின் கீழ் 696 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.44 கோடி மானியத்துடன் கூடிய ரூ.4.80 கோடி கடனுதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு ரூ.6.26 கோடி மானியத்துடன் கூடிய ரூ.20.85 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு புதிய குப்பை தொட்டிகள்
கோவை, ஜூலை 18- கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த குப்பை தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய குப்பை தொட்டிகள் வைக்கப்பட உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 650 புதிய குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாநகராட்சியின் மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளது. சுமார் 6,500 தெருக்கள் உள்ளன. 15 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பாக மண்டலம் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் என முக்கிய இடங்களில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதற்கு எதுவாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த குப்பை தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்தும், உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் தெரு நாய்கள் இரவு நேரங்களில் குப்பைகளை கலைத்து தெருக்களில் சிதற விடுகின்றன. இன்னும் சில இடங்களில் பழுதடைந்த குப்பை தொட்டிகளில் இருந்து காற்றினால் அடித்து வருப்படும் குப்பைகள் சாலைகளில் விழுந்து, வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், புதிய குப்பை தொட்டிகள் வாங்க மாநகராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சி சார்பாக 1000 குப்பை தொட்டிகள் புதியதாக வாங்க முடிவு செய்யப்பட்டதில் முதல்கட்டமாக 650 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. வார்டு வாரிய இந்த குப்பை தொட்டிகள் தேவையான இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
குறைதீர் கூட்டம்
நாமக்கல், ஜூலை 18- நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள், எரிவாயு விநி யோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ லர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் புதனன்று (நாளை) நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், நுகர்வோர்கள் கலந்து கொண்டு தெரிவிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள் ளார்.
பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்கள் மனு
ஈரோடு, ஜூலை 18- ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிஐடியு வினர் மனு அளித்தனர். இதுகுறித்து சிஐடியுவினர் அளித்த மனு வில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாநக ராட்சியில் பொது சுகாதார பணியில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், டெங்கு, மலே ரியா ஒழிப்பு பணியில் பணியாளர்கள், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்படி குப்பை களை தரம் பிரித்து இயற்கை உரம் தயா ரித்தல், சுகாதார மேற்பார்வையாளர்கள், குடிநீர் விநியோகிப்பவர்கள், பிளம்பர்கள், கணிணி இயக்குநர்கள், டேட்டா என்ட்ரி ஆப் ரேட்டர்கள் ஆகிய பிரிவுகளில் 1800 பேர் வரை பணியாற்ற வேண்டிய நிலையில், 1400க்கும் குறைவான ஊழியர்களே பணி யாற்றுகின்றனர். இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்திரமற்ற தொழிலாளர்களாக உள்ளனர். இதுபோன்றே கோபி, சத்தி, பவானி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சிகள், பெருந்துறை, சென்னிமலை, மொடக் குறிச்சி, கொடுமுடி, அந்தியூர் உள்ளிட்ட 42 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட 225 கிராம ஊராட்சி களிலும் பணியாற்றுகிறார்கள். ஒட்டு மொத்த மாக மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக உள்ளாட் சிகளில் நிரந்தர தொழிலாளர்களை விட நிரத் தரப்படுத்தப்படாத தொழிலாளர்களே மிக அதிகமானவர்கள் உள்ளனர். இப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது, கடந்த 2017 ஆம் ஆண்டு வரை பல்வேறு ஏற்றத்தாழ்வான விகிதங்க ளாகவே இருந்தது. இதன்பின் பல்வேறு முறையீடுகள், போராட்டங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணை கள்படி, குறைந்தபட்ச ஊதியத்தை நடை முறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு அமலாக வேண்டிய அகவிலைப்படி உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இது இத்தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. உள் ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் இதர ஊழியர்கள் உரிய தேதியில் பலன்களைப் பெறுவது, கால தாமதம் ஏற்படும் போது, பின்னீட்டு தொகைகளைக் கணக்கிட்டு பெறு வது என்பது தவறாமல் நடைபெறுகிறது. ஆனால், தூய்மை பணியாளர்களுக்கு எவ்வ ளவு மாதம் கடந்தாலும், பின் சம்பளம் என்பது கொடுப்பதில்லை. உள்ளாட்சி அமைப்பு களின் இம்மாதிரியான நிலைமை இருப்ப தென்பது சமூக ஒடுக்குமுறையின் வெளிப் பாடாகவே அமைகிறது. துய்மைத்தொழிலாளர்கள் குறைந்தபட் சம் 4 ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமற்ற முறையில் பணியாற்றி வருகிறார்கள். இத்தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிஐடியு சங்க தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எஸ்.மாணிக்கம் உள் ளிட்ட சிஐடியு தலைவர்கள் தூய்மை பணியா ளர்களுடன் சென்று மனு அளித்தனர்.
வெறிநாய் கடிக்கு மருந்து இல்லை திருப்பி அனுப்பப்படும் நோயாளிகள்
திருப்பூர், ஜூலை 18 - ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் வெறிநாய்க் கடிக்கு மருந்து இல்லை எனச் சொல்லி சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் வெறிநாய் கடிக்கு ஆளான ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு வெறிநாய் கடிக்கான மருந்து வரவில்லை எனச் சொல்லி திருப்பூர் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி யுள்ளனர். இதனையடுத்து சில நாட்களுக்குப் பிறகு வேறொ ருவர் நாய்க்கடிக்கு ஆளாகி ஊத்துக்குளி மருத்துவம னைக்குச் சென்றுள்ளார். அப்போதும் வெறிநாய் கடி மருந்து இருப்பு இல்லை. மேலிருந்து எப்போது வரும் என்று தெரிய வில்லை. எனவே திருப்பூர் செல்லும்படி மருத்துவர்கள் கூறி யதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சுகாதாரத் துறை துணை இயக்குநரிடம் விசாரித்தபோது வெறிநாய் கடிக்கு உரிய மருந்து இருப்பு இல்லை. வந்தவுடன் ஊத்துக்குளி மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என பதிலளித்துள் ளனர். தற்போது தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின் றன. பலர் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனையை நாடிச் செல்லும் நிலை உள்ளது. உரிய நேரத் தில் சிகிச்சை பெறத் தவறினால் உயிருக்கே ஆபத்தாக முடி யும் நிலை உள்ளது. எனவே இதன் முக்கியத்துவம் கருதி அரசு நிர்வாகம் தேவையான அளவு வெறிநாய் கடி மருந்தை அரசு மருத்துவமனையில் எப்போதும் தயார் நிலையில் இருப்பு இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள் ளனர்.
வாலிபர் சங்க கிளை மாநாடு
திருப்பூர், ஜூலை 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முருங் கப்பாளையம் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை கே.தங்க வேல் நினைவகத்தில் நடை பெற்றது. கிளைத் தலைவர் கோகுல் கொடியேற்றி வைத் தார். மாநகரத் தலைவர் து. சம்பத், செயலாளர் கண் ணன், பொருளாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் பங் கேற்று உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இம்மாநாட்டில் பங்கேற்று வாழ்த்திப் பேசி னர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவர் பிரவீன், செயலாளர் வீரமுத்து, பொருளாளர் பூவரசன், துணைத் தலைவர்கள் அருண், கோகுல்ராம், துணைச் செயலாளர்கள் கலைமணி, நளின் ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர்.
பள்ளிகள் திறக்காவிட்டால் போராட்டம்: பெற்றோர்
அவிநாசி, ஜூலை 18 – அவிநாசியில் பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இதே நிலை நீடித்தால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் பெற்றோர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சின்னசேலம் பள்ளி சம்பவத்தை தொடர்ந்து அவிநாசி அருகே நரியம்பள்ளி ஹயக்ரீவர் வித்யாலயா, அம்மாபாளை யம் ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன், வீரசிவாஜி வித்யா லயா மெட்ரிகுலேஷன் பள்ளி, அன்னூர் நவபாரத் உள்ளிட்டு பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளனர். இந் நிலையில் பலரும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிக்கூடம் திறக்கப்படாவிட்டால் பெற்றோர்கள் போராட் டத்தில் ஈடுபடப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் உடுமலை நகர எல்லையான எலையமுத் தூர் பிரிவு பகுதியில் விஎவி இன்டர்நேசனல் என்ற தனியார் பள்ளி திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டது இது குறித்து உடுமலை வட்டார கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, இன்று அந்த பள்ளியில் வாகனங்கள் பராமரிப்பு வேலைகள் நடை பெற்றதால் விடுமுறை விட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித் தது, என்றார். எனினும் விஎவி பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.
பாராட்டு
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடத்தப்பட்ட தன் னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர் செந்தில்குமார் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் நினைவு பரிசு வழங்கி பாராட் டினார்.
மின் பயனர் குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஜுலை 18- ஈரோடு மின் பகிர்மான வட்ட, மேற்பார்வை பொறியா ளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் கோட்ட அலுவலகத்தில் புதனன்று (நாளை) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெருந்துறை கோட்டத்திற்குட்பட்ட பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னி மலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துார், விஜயமங்க லம், பிடாரியூர், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி, ஜூலை 18- தருமபுரி மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 22 ஆம் தேதி காலை 11 மணியள வில் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூடுதல் கூட்ட அரங் கில் நடைபெற உள்ளது. இதில், தருமபுரி மாவட்டத் தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதி முறைகளை பின்பற்றி இக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளை யும், கருத்துகளையும் தெரி வித்து பயன்பெற வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் துள்ளார்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு தயார் நிலையில் சுகாதாரத்துறை
அமைச்சர் பேட்டி
கோவை, ஜுலை 18– குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை திங்களன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், குரங்கு அம்மையின் பாதிப்பு உலகில் 63 நாடுகளில் பெரிய அளவில் தாக்கம் துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் கேரளாவில் ஒருவருக்கும், தற்போது தெலுங்கானாவில் ஒருவருக்கும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டு சதவிகிதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. விமான நிலையங்கள் உள்ள நகரங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லது மாவட்ட அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை வார்டு ஒன்று தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 படுக்கைகள் கொண்ட, குரங்கு அம்மைக்கான பிரத்யேக வார்டு தொடங்கப்படும். கேரளா மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டிற்கு வரும் 13 சோதனை சாவடிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் கண்காணிப்பு உள்ளன. பொள்ளாச்சி, வாளையார் உள்ளிட்ட சோதனைசாவடிகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்றார். அமைச்சரின் இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.