பென்னாகரம், மார்ச் 29- லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலா பயணிகளை பரிசில் ஏற்றிச்சென்ற 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கேரளா, கர் நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பரிசலில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்று லாப் பயணிகளில் சிலர் பரிசலில் பயணம் மேற்கொண்ட னர். இதுதொடர்பாக பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லைப் ஜாக்கெட் அணிவிக்காமல் பரிசலில் அழைத்து சென்ற தரு மன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பரிசல் ஓட்டிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் கடுமையான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.