districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

சேலம், ஜன.27- வீராணத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 3 பேரை  காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள மன்னார் பாளையம் பிரிவு சாலை பகுதியில் போதை மாத்திரை, ஊசி  விற்பனை செய்யப்படுவதாக வீராணம் காவல் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அல்லிக்குட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை சந்தேகத்தின் பெயரில்  போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில்  அவர் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து  அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை அனுபவித்த தாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு போதை மாத் திரை விற்பனை செய்த சேலம், அழகுசமுத்திரத்தைச் சேர்ந்த  கோகுல்ராஜ் (29), பாகல்பட்டியைச் சேர்ந்த தினேஷ் கண்ணா (27), ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தியைச் சேர்ந்த  கோகுலன் (26) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, 2,615 போதை மாத்திரை, ஊசிகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். போதை மாத்திரை விற் பனை செய்யும் கும்பல் குறித்த பட்டியலை தயார் செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள்: வைரமுத்து

சேலம், ஜன.27- கண்கள் மட்டுமே பொய் சொல்லாதது. எனவே, கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டும், என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை தொடக்க விழா, சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற் றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகையில், சமூக ஊடக வளர்ச்சி என்னை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சமூக ஊடங்க ளில் பேசுவதன் மூலம் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பிம் பத்தை உடைக்க முடியாது. கண்கள் மட்டும் தான் பொய் பேசாதது. கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். ஆனால், தற்போது செவி யோடு செவி கேட்டு தான் பேசுவது அதிக ரித்துள்ளது, என்றார்.

நிலம் ஆக்கிரமிப்பு: முதியவர் தற்கொலை முயற்சி

சேலம், ஜன.27- நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு முதிய வர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள கொட்டவாடி பகுதி யைச் சேர்ந்தவர் மாரிமுத்து (75). ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று வந்த இவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண் ணையை தலையில் ஊற்றி தற்கொலை முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீ சார் அவரை தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறுகை யில், எனக்கு சொந்தமான 56 சென்ட் நிலத்தை எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் போலி ஆவ ணம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். எனவே, எனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய் யும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார். போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு

சேலம், ஜன.27- சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதி கருதி 5 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அதி நவீன இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ரயில் நிலை யத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே துறை சார்பிலும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து  வருகிறது. அதன்ஒருபகுதியாக, குளோபல் கிரியேட் டர்ஸ் நிறுவனத்தின் சார்பில், ரயில் நிலைய நடைமேடை  5 மற்றும் 3 ஆவது நடைமேடைகளில், 5 ரூபாய்க்கு சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறக்கப்பட் டது. இந்நிகழ்வில், சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, குளோபல் கிரேட்டஸ் நிறுவன இயக்குநர் சுரேஷ், மேலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கோரிக்கை

சேலம், ஜன.27- டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தின் பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் செந்தில், செயலாளர் காசி  விஸ்வநாதன், லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநி லத் தலைவர் தன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகை யில், சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு தொழில் பிரச்சினைகள் குறித்து பொதுக்குழு வில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் அப ராத முறையை ரத்து செய்ய வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். வாகன காப்பீடு மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும், என்றனர்.

சொத்து தகராறு: மூதாட்டி கொலை?

சேலம், ஜன.27- சீரகப்பாடியில் சொத்து தகராறு காரணமாக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சீரகாபாடியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி சின்னத்தாயி (85). இவருக்கு ஒரு  மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 1.10  ஏக்கர் நிலத்தை பிரிப்பது தொடர்பாக மகன், மகள் இவ ருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தனி யாக வசித்து வந்த சின்னத்தாயி, தனது சொத்தை பிரிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள் ளார். இந்நிலையில், திங்களன்று காலையில் வீடு நீண்ட நேரம் திறந்து கிடந்துள்ளது. அருகிலுள்ளவர்கள் வீட் டுக்குள் சென்று பார்த்த போது, தலையில் பலத்த காயத் துடன் சின்னத்தாயி இறந்து கிடந்துள்ளார். ஆட்டையாம் பட்டி காவல் துறையினர், உடலை மீட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெறி நாய்கடியால் ஆடுகள் உயிரிழப்பு: உரிய இழப்பீடு வழங்க விதொச வலியுறுத்தல்

ஈரோடு, ஜன. 27- பெருந்துறை அருகே வெறிநாய்க்கடித்து ஆடுகள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், காஞ்சிக் கோயில் அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் வெறி  நாய்க்கடித்து சுமார் 10 ஆடுகள் உயிரிழந்தன. இவற்றால்  பாதிக்கப்பட்ட பழனிசாமி வீட்டிற்குச் சென்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பி.முத்து பழனிசாமி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விடுத்த செய்திக் குறிப்பில், இதுபோன்று பல சம்பவங் கள் இப்பகுதியில் நடப்பது தொடர்கதையாகி வரு கிறது. குறிப்பாக சிறுகளஞ்சி பகுதியில் உள்ள கரட்டுப் பாளையம் பகுதியில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்துள்ளனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆயினும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தெருநாய்கள் மற்றும் வெறிநாய் கள் ஆடுகளைக் கடித்து கொல்வதைத் தடுக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்க ளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என  மாவட்டக்குழுவின் சார்பில் தலைவர் எஸ்.வி.மாரி முத்து மற்றும் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் நாளை சிஐடியு சிறப்பு பேரவை  அகில இந்திய தலைவர் ஹேமலதா பங்கேற்பு

திருப்பூரில் நாளை சிஐடியு சிறப்பு பேரவை  அகில இந்திய தலைவர் ஹேமலதா பங்கேற்பு  திருப்பூர், ஜன.27 - அகில இந்திய பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலா ளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருப்பூரில்  புதன்கிழமை நடைபெறுகிறது.  இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் சிஐடியு  அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா பங்கேற்கும்  பேரவை கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழனிச் சாமி நிலையத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது.  இந்திய அளவில் பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழி லில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களை ஒருங்கி ணைப்பதற்காக, அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு கோவையில் நடைபெற்ற மாநாட்டில் அமைக்கப்பட்டது. பஞ்சாலை மற்றும் விசைத்தொழில் மையங்கள் செயல் படும் 10 மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு உறுப் பினர்கள், திருப்பூரில் புதன் கிழமை காலை நடைபெறும்  ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க வருகின்ற னர்.  சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேம லதா, ஒருங்கிணைப்புக்குழுவின் அகில இந்திய கன்வீனர்  ஆர். கருமலையான் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்ற னர். இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெறும் சிஐடியு  முன்னணி ஊழியர்களுக்கான சிறப்பு பேரவை கூட்டத்தில்  டாக்டர் ஹேமலதா இன்றைய சூழலில் தொழிற்சங்கங்க ளின் பணி குறித்து உரையாற்றுகிறார்.

பாடப்புத்தகத்தை தாண்டிய கல்வியை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வழங்குகின்றன 
எழுத்தாளர் பவா.செல்லதுரை பேச்சு

திருப்பூர், ஜன. 27 - பாடப் புத்தகத்தைத் தாண்டிய  கல்வியை, புத்தகக் கண்காட்சி யில் இருக்கும் புத்தகங்கள் வழங் குகின்றன என்று எழுத்தாளர் பவா. செல்லதுரை கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழா வில் மூன்றாம் நாளான சனிக்கி ழமை நடைபெற்ற நிகழ்வில், பவா  செல்லதுரை பேசியதாவது: பணம் சார்ந்த சமூகமாக, பணம்  சம்பாதித்து கொடுக்கும் ஏடிஎம் எந் திரங்களாக நம்முடைய குழந்தை களை மாற்றி விட்டோம். 99 சதவீதம்  பேர் இப்படித்தான் இருக்கி றார்கள். இது மட்டும் தான் வாழ்க் கையா? சக மனிதன் மீது அன்பு, தோழமை, இந்த சமூகம் குறித்து, வசிக்கும் தெரு குறித்து, நமக்கு எந்த தொடர்பும் இல்லையா?  அபூர்வ மலர்களை வளர்க்க  வேண்டிய பூந்தொட்டிகளில், காசுக்கு விற்கும் கத்தரிக்காயை யும், வெண்டைக்காயையும், தக்கா ளியையும் விளைவிக்கக் கூடிய வர்களாக நம் குழந்தைகளை மாற்றி வருகிறோம். குழந்தைகளி டம் படைப்பாக்கம் என்ற கல்வி யைப் பறித்ததில் பெற்றோரின் பேராசை முக்கிய பங்கு வகிக்கி றது. நாம் எல்லோரும் கடந்து போகும் விஷயங்களை மனதில் தேக்கி வைத்து பிரசவம் போல வலி  சுமந்து, படைப்பாக, கவிதையாக, கற்பனையாக, இந்த சமூகத்துக்கு  கொடுத்துவிட்டு போகிறார்கள். வகுப்பறையில் நாம் கற்றுக் கொள் ளாத பாடத்தை, பாடப்புத்தகத்தை தாண்டிய கல்வியை, புத்தகக் கண் காட்சியில் இருக்கும் புத்தகங்கள் கொடுக்கின்றன.  பெண்களின் கனவுகளில் கரப் பான் பூச்சி வருகிறது. ஏன், பெண் கள் சமையல் அறையை விட்டு வெளியே வர முடியவில்லை? இதைப் பற்றி சிந்திக்க சொரணை யற்ற சமூகமாக நாம் இருக்கி றோம். எது சந்தோசம் தருகிறதோ, அதுதான் சிறந்த கல்வி. கல்வியின்  போதாமையை, புத்தகக் கண்காட் சியில் உள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஈடு செய்து வழங்கு கின்றன. எல்லோருக்கும் வாய்க் கப்பட்டது ஒரே வாழ்க்கை தான்.  அவரவர் வாழ்க்கையை அவரவர்  வாழ வேண்டும். நம் வாழ்க்கையை  வாழும் பொழுதே ஒரு புத்தகத்தை படித்தால் அந்த எழுத்தாளரின் வாழ்க்கையையும் நாம் பெற்று விடுகிறோம். நாம் இழந்த கனவு களை, அபிலாசைகளை, ஆசை களை எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப நினைவூட்டி கொண்டே இருக்கின்றனர். மிகப்பெரிய அருட் கொடையை கொடுப்பது புத்தகங் கள்தான். குழந்தைகளை தாராள மாக புத்தகங்களை வாசிக்க விடுங் கள். பாட புத்தகங்களை தாண்டி புத் தகங்களை வாசிப்பவர்கள் சிறந்து  வருவார்கள். வியாபாரிகளே, வியாபாரி களே! ரோஜாக்களை விற்று அதை விட உயர்ந்ததாக எண்ண வாங்க போகிறீர்கள்? என்றார். இந்நிகழ்வுக்கு கிட்ஸ் கிளப்  பள்ளி தாளாளர் மோகன் கார்த்தி தலைமை வகித்தார். பிரிண்டிங் குமாரசாமி வரவேற்றார். திருப்பூர்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வாழ்த்திப் பேசி னார். அப்போது அவர் கூறும் போது, கற்க கசடற என்று சொல்லப் படுகிறது. ஆனால் இங்கே கற்றுக்  கொள்வதும், கற்றுக் கொடுப்ப தும் சவாலாக மாறி வருகிறது. இந்த  சவாலை சந்தித்து தான் சமூகம் முன் னேறி வருகிறது என்று கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் நியாஸ் அகமது பாஷா, கோட்டாட்சியர் மோகனசுந்தரம், மணியம் மு.ராம சாமி, அம்மன் ஃபேஷன் சிவக்கு மார், பி.அருள் செல்வம், ஆசிரியர்  பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ந.காஞ்சி புரம் அரசு பள்ளி மற்றும் கிட்ஸ் கிளப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பெண்கள்  இளைஞர்கள் உட்பட திரளானவர் கள் கலந்து கொண்டனர். நிறை வாக பின்னல் புக் டிரஸ்ட் சார்பில்  சி.கே.கனகராஜ் நன்றி கூறினார்.

நத்தக்காடையூர் கிராம ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற கிராம சபையில் எதிர்ப்பு

நத்தக்காடையூர் கிராம ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற கிராம சபையில் எதிர்ப்பு திருப்பூர், ஜன.27 - காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் கிராம ஊராட் சியை பேரூராட்சியாக மாற்றக் கூடாது என்று கிராம சபை  கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நத்தக்காடையூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் இந்த  ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்திபுரத்தில் குடியரசு தினமான  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து  கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம்  தாலுகா குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ், பேரூராட்சி யாக தரம் உயர்த்தக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொ ழிந்தார்.  நத்தக்காடையூர் ஊராட்சியில் போதிய வருமானம் இல்லை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இந்த  சூழ்நிலையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் பொதுமக் களுக்கு சொத்து வரி, குப்பை வரி என சுமை அதிக ரிக்கும்.  மேலும் கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் வாய்ப்பு  பறிபோகும். ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். எனவே நத்தக்காடையூர் கிராம ஊராட்சியை பேரூ ராட்சியாக தரம் உயர்த்த கூடாது. இப்போது இருப்பது போலவே கிராம ஊராட்சியாகவே தொடர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி னார். தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால் வெளிநடப்பு செய் வதாகவும் தெரிவித்தார். எனினும் கூட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஏற்கனவே நத்தக்காடையூர் கிராம ஊராட்சியை பேரூ ராட்சியாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி  மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்று கூறினார்.  இதன் அடிப்படையில் பேரூராட்சியாக தரம் உயர்த்து வதை எதிர்த்து நத்தக்காடையூர் கிராம ஊராட்சியாக நீடிக்க  வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வளர்ச்சி பணிகளை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள்

உடுமலை நகர்மன்ற உறுப்பினர்கள் சரமாரி புகார்

உடுமலை, ஜன.27 - உடுமலை நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என  நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி னர். உடுமலை நகராட்சி கூட்டரங்கில் 25  ஆவது நகர்மன்ற சாதாரண கூட்டம் நக ராட்சி தலைவர் மத்தீன் தலைமையிலும், ஆணையாளர் சரவணக்குமார் முன்னிலை யில் திங்களன்று நடைபெற்றது. இதில் பொறி யியல் பிரிவில் 78, பொதுப்பிரிவில் 4, வரு வாய் பிரிவில் 6, ஊரகப்பிரிவில் 3, சுகாதாரப் பிரிவில் 14 என மொத்தம் 107 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இக்கூட்டம் துவங்கியவுடன்  2 ஆவது வார்டு  உறுப்பினர் தனது வார்டில் சாலை,  மின்விளக்கு, மழைநீர் வடிகால், பூங்கா  உள்ளிட்ட எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இது குறித்து, தொடர்ந்து கூட்டங் களில் வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் தெரி வித்தும் அலட்சியமாக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் பணிகளை முடித்து கொடுக்காவிட்டால், உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் முறையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி, கூட்டத்தில் இருந்து  வெளிநடப்பு செய்தார்.  இதைதொடர்ந்து பேசிய உறுப்பினர்கள்,  வரிவசூல் கட்ட வரும் பொதுமக்களை,  பணி யாளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாக கூறி  அலைக்கழித்து வருகின்றனர். கலைஞர் பூங் காவில் பல மாதங்களாக விளக்குகள் கூட எரி யவில்லை இதை முறையாக பராமரிக்க வேண்டும். எஸ்.என்.ஆர் நகர் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். மேலும், நகரப்ப குதிகளில் சேகரிக்கும் குப்பைகளை முறை யாக அப்புறப்படுத்தவில்லை. நகராட்சி  அதிகாரிகள்  தங்களின் பணிகளை முறை யாக செய்வதில்லை என்று உறுப்பினர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். அதேபோல் உடுமலை நகராட்சிக்கு ஒதுக் கப்பட்ட ரூ.50 கோடி சிறப்பு நிதியில் நடை பெற்ற, புதிய பேருந்து நிலையம், சந்தை  வளாக பணி, தங்கம்மாள் ஓடை, கழுத்தருத் தான் பள்ளத்தில் வெள்ள நீர் வடிகால்  பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை.  இப்பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் ஏன் பணிகள் முழுமையடையவில்லை?  மேலும் நகர்மன்ற முதல் கூட்டத்தில் அண் ணா கலையரங்கம் கட்ட தீர்மானம் போடப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், அதற்கான  பணிகள் துவங்கபடாததற்கு என்ன கார ணம்? அவுட்சோர்சிங் பணிகளுக்காக ரூ.75  லட்சம் மன்றத்தின் அனுமதிக்காக வைக்கப் பட்டுள்ளது. அதில், பணிபுரியும் பணியா ளர்கள் முறையாக நகராட்சியில் பணி புரிகின் றனரா? பணியாளர்களின் வருகைப் பதிவேடு  விவரம் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு  செய்தீர்களா என அடுக்கடுக்கான கேள்வி களை எழுப்பினர். உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.25 லட்சம்  மதிப்பில் நடைபெற்றது. அந்த பூங்கா பணி கள் எவ்வளவு லட்சம் மதிப்பில் நடைபெற் றுள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய் தீர்களா? ஆனால் பூங்கா பணிக்கான தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி உள்ளீர்கள். அதிகாரிகள் நகராட்சி பணிக ளில் அலட்சியமாக உள்ளனர். பொதுமக் கள் பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர். உடுமலை நகராட்சி ஆளும்கட்சியின் வசம் உள்ள நிலையில், நகர்மன்ற கூட்டத்தில்  ஆளும்கட்சி உறுப்பினர்களே நகராட்சியில் வேலைகள் நடைபெறுவதில்லை என்றும், நகரமன்ற அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைத்தது ஆளும்கட்சியில் உட்கட்சி பிரச் சனை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி யது.