districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காவல் அதிகாரியை தாக்கிய 3 பேர் கைது

சேலம், ஜூன் 13- மல்லியகரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வா ளரைத் தாக்கிய மூன்று பேரை காவல் துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லிய கரை காவல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல்  விற்பனை நிலையத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக  காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் செவ்வாயன்று இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு தீவட்டிப்பட்டி, நாச்சனாம்பட்டி காலனியைச் சேர்ந்த பிரபு, ஜெய்கண்ணன், சிவசங்கர் ஆகிய மூவரும் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், பெட்ரோல் விற்பனை  நிலையத்தில் புகை பிடிக்கக்கூடாது என எச்சரித்துள் ளார். ஆனால், அந்த மூவரும் காவலர் எனத் தெரிந் தும் செல்வராஜை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம டைந்த செல்வராஜ் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, காவல் அதிகாரியை தாக்கிய மூவரையும் அங்கிருந்த வர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

நாமக்கல், ஜூன் 13- நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைக ளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென அறி விக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும், பிற துறைகளின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விதமாகவும், திருநங்கை களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை,  மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் வாக்காளர் அடை யாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 21 ஆம் தேதியன்று இம்முகாம் நடைபெற உள் ளது. எனவே, இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தி லுள்ள திருநங்கைகள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான அரசு ஆவணங்களை பெற்று பயனடைய லாம் என மாவட்ட ஆட்சியர் ச.உமா அழைப்பு விடுத் துள்ளார்.

‘பார்லர்’ வருகை: வாழ்வாதாரம் பாதிப்பு

நாமக்கல், ஜூன் 13- பார்லர் வருகையால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத் தினர் திருச்செங்கோடு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. இதனை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சங்ககிரி சாலையில் தனி யார் நிறுவனத்தின் சார்பில் ‘பார்லர்’ திறக்கப்பட்டுள் ளது. சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத் துக் கொள்ளாமல் முடி திருத்தும் தொழிலை செய்து  வரும் இவர்கள், ‘கட்டிங் மற்றும் ஷேவிங்’ செய்ய  சங்கம் நிர்ணயித்துள்ள தொகையைவிட 50 ரூபாய் குறைத்து வாங்குவதாக விளம்பரங்கள் செய்துள்ள னர். இதனால் தங்களது தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால், அந்த விளம்பரங்களை நகரி லிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் நிலையத்தில் மனு அளித்துள்ள னர். மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலை யிட்டு இதுபோன்ற நிறுவனங்கள், சிறு தொழில் செய்து  பிழைத்து வரும் எங்களைப் போன்ற சவரத் தொழி லாளர்கள் வாழ்வை சிதைக்காமல், பாதுகாத்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.கே.ராஜா, திருச்செங்கோடு நகரத் தலைவர் முரு கேசன், செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், சக்திவேல், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாம்: 50 பேர் 

நாமக்கல், ஜூன் 13- தனியார் பல் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பல் மருத்துவக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை ரெட் கிராஸ் மாவட்டச் செயலாளர் ராஜேஸ் கண்ணன் மற்றும் கல் லூரி முதல்வர் சரத் அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பல் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  ரத்ததானம் வழங்கினர். இதையடுத்து மாணவர்க ளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஈஸ்வர், ஆய்வக நுட்புநர் சுரேஷ், யூத் ரெட் கிராஸ் திட்ட  அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.