districts

img

கோவை மெட்ரோ ரயில் - பொது போக்குவரத்தை பலப்படுத்தும்

கோவைக்கு மேலும் 3 புதிய மேம்பாலங்கள்

கோவையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளதாக நெடுஞ் சாலைத் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.  மாநகரில் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை - திருச்சி  சாலை ராமநாதபுரத்தில்  ரூ.250 கோடி செலவில்  3கிலோ மீட்டா் தூரத்துக்கு  மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், மாநகரின் முக்கிய சாலையான அவினாசி சாலையில் விமான  நிலையம், கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள்  போன்றவை அமைந்துள்ளன. சேலம், ஈரோடு, திருப்பூா் என முக்கிய நகரங்களுக்குச்  செல்லும் வழித்தடமாகவும் உள்ளதால், போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்  வகையில் 10.10 கிலோ மீட்டா் நீளத்தில் இங்கு பாலம் அமைக்கப்படுகிறது. இந் நிலையில், கோவையில் காளப்பட்டி சாலை சந்திப்பு, சிங்காநல்லூா், சாய்பாபாகாலனி  என மேலும் 3 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில்,  காளப்பட்டி சாலை சந்திப்பில் இருந்து துடியலூா் சாலை சந்திப்பு வரை 1.40  கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப் பட உள்ளது. சிங்காநல்லூா் உழவா் சந்தை முதல் ஜெய்சாந்தி தியேட்டர் வரை 2.40 கிலோ மீட்டா்  தூரத்துக்கு ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.  சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ  மீட்டா் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த 3 மேம்பாலங்கள் ரூ.252 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப் பாலங்கள் அமைப்பதற்கு அதிகளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இப்பாலங்களின் கட்டுமானப் பணி டிசம்பா் மாதம் தொடங்கப்பட உள்ள தாக தெரிவித்தனர்.

  தொழில் நகரமான கோவையில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு  நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  பொதுப்போக்குவரத்து பலப்படுத்தாதே காரணமாக தனியார் வாகனங்கள் அதி கரித்து இந்த நெரிசல் உருவாகிறது. விரைந்து செல்ல வேண்டிய சாலை யில்கூட வாகனங்கள் ஊர்ந்து செல்ல  வேண்டிய நிலை இருந்து வருகிறது. தேவையொட்டியே வாகனங்களின் அணி வகுப்பு அதிகரித்து வருகிறது என்றாலும், அரசின் பொதுப்போக்குவரத்து அதிகம் இல்லாததன் விளைவாகவே தனியார் வாகனங்கள் அதிகரித்துள்ளதும் ஒரு முக்கியமான காரணமாகும். இதனால், எரி பொருட்கள் செலவு அதிகரிப்பதும், மனித உழைப்பு போக்குவரத்து நெரிசலிலேயே பாதி குறைந்து விடுகிறது. ஆகவே சிஐடியு  உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய, மாநில அரசுகளோ லாபம்,  நஷ்டம் கணக்கு பார்த்து போக்குவரத்தை தனியார் மயப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது. தனியார் வாகனங்கள் லாபம்  அதிகம் வருகிற வழித்தடத்திலே இயக்கு வதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் களே அன்றி, கிராமத்தின் உட்புறப்பகுதி களின் வழித்தடங்களில் இயக்க முன்வர மாட்டார்கள் என்பது அனுபவம்.

இந்நிலையில், கோவை சாலைப் போக்குவரத்து மிகவும் நெருக்கடியான ஒன்றாக மாறும் நிலை உள்ளது. இதனால்  கோவைக்கு மெட்ரோ ரயில் போன்ற  விரைவுப் போக்குவரத்து வசதி அவசிய மாக உள்ளது. மக்கள் சாலைகளில் செல விடும் நேரத்தை குறைப்பதன் மூலம்  மனிதர்களின் உற்பத்தி திறன் அதிகரிப்ப துடன், பொருளாதாரத்தையும் அதிகரிக் கிறது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கை பல ஆண்டுகளுக்கு முன்னரே  எழுந்துவிட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டில்  கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று அப்போதைய பிரதமர்  மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா,  கோவையில் மோனோ ரயில் இயக்குவ தற்கான திட்ட சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.  கோவைக்கு மெட்ரோ ரயில் தேவை யை கருத்தில் கொண்டு 2013 ஆம் ஆண்டு  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்முயற்சி மேற்கொண்டு மெட்ரோ ரயில்  நிபுணர் ஸ்ரீதரனை வரவழைத்து மெட்ரோ ரயில் சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். இதனையடுத்து அவர், கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கோவையில் மெட்ரோ ரயில்  திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதை யடுத்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு சாத்தியக்கூறு ஆய்வ றிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை யடுத்து ஆலோசனைக் கூட்டங்கள், வழித் தடங்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதற்கிடையே மெட்ரோ ரயில்  திட்டத்தை ரூ.9,424 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தலாம் என மதிப்பிட்டிருப்ப தாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளித்தது. அதன்படி, கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத் துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தத் திட்டப்படி, கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது.  அதற்குத் தேவையான நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட்  வசதி, ஏற்கெனவே உள்ள சாலையைக் கடப்பதற்கு இடவசதி உள்ள இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக் கப்பட உள்ளன. விமான நிலையம், ரயில் நிலையம்,  பேருந்து நிலையங்கள், பெரிய நிறுவ னங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரயில் நிலையங்கள் உரு வாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையின்  தேவை கருதி விரைவில் மெட்ரோ ரயில்கள்  துவங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.