districts

img

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை 2 பேர் உயிரிழப்பு; ஒருவருக்கு தீவிர சிகிச்சை

சூலூர், நவ.15- சூலூரில் தீபாவளி பல கார சீட்டு நடத்தி வாங்கிய பணத்தை வட்டிக்கு விட்டு, அந்த பணம் திரும்ப கிடைக் காத நிலையில், ஒரே குடும் பத்தைச் சேர்ந்த இருவர் தற் கொலை செய்து கொண்டு  உயிரிழந்தனர். ஒருவர் ஆபத் தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காந்தரூபன், தனது மனைவி பழனியம்மாள், மகள் தீர்ச்சனா தேவி ஆகியோரு டன் கோவை மாவட்டம், சூலூரில் வாடகைக்கு வீட்டு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தார். அப்பகுதியில் இவர் கள் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.  தீபா வளிக்கு நடத்திய சீட்டில் வந்த பணத்தை பழனியம்மாள் வட்டிக்கு விட்டுள்ளார். அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனை வரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனவேத னையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து  பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுக் கொண்டி ருந்த நிலையில், திங்களன்று மாலை குடும்பத்துடன் பழனி யம்மாள் மற்றும் அவரது கணவர் காந்தரூபன், மகள் தீர்ச்சனா தேவி என மூவரும் கைகளை அறுத்துக் கொண்டு தற் கொலைக்கு முயன்றனர். முன்னதாக, தீர்த்தனா அவரது உறவினர் தங்கராஜ்-க்கு தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளார். அவர் வரு வதற்குள் மூவரும் தற்கொலை செய்துள்ளனர். இதில் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். தந்தை மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தங்கராஜ் சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதைய டுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.