கோவை, நவ.25- அடுத்தாண்டு ஜன.4 முதல் 8 ஆம் தேதி வரை 15 ஆவது கோவை விழா கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் ஆகி யோர் அறிவித்து, விழா விற்கான இலட்சினையை வெளியிட்டனர். கோவையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கோவை விழா கொண்டா டப்படுகிறது. கலை நிகழ்ச்சி கள் உட்பல பல்வேறு விதமான கண்கவர் நிகழ்ச்சிகள் இந்த கோவை விழாவில் நடைபெறும். கோவை மாநகராட்சி நிர் வாகம் மற்றும் யெங் இந்தியன்ஸ் அமைப் பினர் இணைந்து இதுவரை 14 ஆண்டுகள் கோவை விழாவை நடத்தியுள்ள நிலையில், 15 ஆவது கோவை விழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு ஜன.4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கோவை விழா நடைபெற உள்ளது. இதற் கான தேதி அறிவிப்பு நிகழ்ச்சி வாலாங்குளம் கரையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகி யோர் இணைந்து கோவை விழாவிற் கான இலட்சினையை வெளியிட்டனர். இதில், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், விழா ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.
அப்போது ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசு கையில், 1804 ஆம் ஆண்டு மாவட்ட அந்தஸ்து பெற்று மிகப்பெரிய படிப்படியாக மாநக ராக கோவை வளர்ந்துள்ளது. கோவையின் பிறந்த நாளிலேயே கோவை விழா குறித் தான அறிவிப்பு நடப்பது சிறப்பாக உள்ளது. கோவை விழா இலட்சினையில் உள்ள மரகதப்புற கடந்தாண்டு முகக்கவசம் அணிந் திருந்தது. இந்தாண்டு முகக்கவசம் அணிய வில்லை. இந்தாண்டு மரகதப்புறா கோவை முழுக்க சுற்றிப்பறக்கும் என்பதில் சந்தேக மில்லை. கலாச்சாரம், சமதர்மம், மாரத்தான், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கோவை விழாவில் இடம் பெற்று வரு கிறது. கோவையின் சிறப்பு வேறு எந்த நகரிலும் இல்லை. கோவையில் கிராமத்தில் நடப்பதை போல் கடந்த 14 ஆண்டாக திரு விழா நடைபெற்று வருகிறது. இது நாட்டில் அரிதான ஒன்றாக உள்ளது. இதற்காக நாம் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கலாம், என்றார். இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பேசுகையில், கோவையின் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது நடைபெறும் விதமாக கோவை விழா நடத்தப்பட வேண்டும். வாரம் ஒருமுறை விழா ஒருங் கிணைப்பாளர்ளை சந்திக்க உள்ளேன். மக்க ளிடமும் கருத்துக்கள் கேட்கலாம். எனவே, நமக்கு தெரியாத விஷயங்களை கோவை விழாவில் நடைமுறைப்படுத்த முடியும், என்றார்.