சேலம், பிப். 17- குறுக்குப்பாறையூரில் குப் பைகளை கொட்டி, விவசா யத்தையும், பொதுமக்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் நடவ டிக்கையை எதிர்த்து 13 ஆவது நாளாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திங்க ளன்றும் கைதாகினர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், அரசிராமணி பேரூராட்சியின் குப்பைகளை ஏற்கனவே கொட்டிய இடத்தை விட்டுவிட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன், குறுக் குப் பாறையூரில் கொண்டு வந்து கொட்டினர். விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதிக்கிற கார ணத்தினால், அதனை தடுத்து கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்படும் விவ சாயிகளும் பொதுமக்களும் குப்பைக் கொட்டும் வாகனங்களை சிறைப் பிடித்தல், மறியல், ஈஓ மற் றும் ஆர்டீஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற பல்வேறு போராட்டங்கள் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் மேற் கொண்டு வருகின்றனர். பேச்சுவார்த்தையில் அளித்த உறுதிமொழியை மீறி மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட் டப்படுவதால், கடந்த 13 நாட்க ளாக தினம்தினம் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டு விவசாயிகள் கைதாகி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, திங்க ளன்று குப்பைக் கொட்டுவதற்கு ஏற்ற வகையில் பாறைகளை உடைப்பது, சுற்றுசுவர் எழுப்புவது போன்ற பணிகள் நடைபெறுவதை யும், குப்பை வாகனங்களையும் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். இத னையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், கிளை நிர்வாகிகள் சத்யராஜ், பி.ஏ.சுப்ர மணி, நவநீத கண்ணன், ஆர்.வெங் கடாஜலம், வளர்மதி, ஜெயந்தி, அம்சவள்ளி மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் 40 க்கும் மேற்பட்டோர் தைகாகினர்.