districts

img

மகாகவி பாரதியின் 102 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, செப்.11- மகாகவி பாரதியாரின் 102 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பார தியார் படத்துக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினர். மகாகவி பாரதியாரின் 102 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் அனு சரிக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக, கோவை மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. கோவை காந்திபுரம், பெரியார் சிலை முன்பு பாரதியாரின் உருவப்படத்துக்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னர். முன்னதாக, விடுதலை போராட் டத்தில் பாரதியின் பங்கு குறித்தும், சனாதனத்திற்கு எதிரான பாரதியின் ஆவேசம் குறித்தும் நினைவு கூறப் பட்டது.  இந்நிகழ்விற்கு, மக்கள் ஒற்றுமை  மேடையின் ஒருங்கினைப்பாளரும், சிபிஎம் கோவை மாவட்டச் செயலா ளருமான சி.பத்மநாதன் தலைமை  ஏற்றார். இதில், யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், என்.செல்வராஜ், என்.ஜாகீர், தினேஷ்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். தமுஎகச நினைவேந்தல் இதேபோன்று, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் சார்பில், பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  தடாகம் சாலையில் உள்ள காந்தியடி கள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத் தில், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமுஎகச கோவை மாவட்ட தலைவர் தி.மணி, செயலாளர் அ. கரீம் மற்றும் நிர்வாகிகள், தஞ்சை  தமிழ்வாணன், மயில்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதே போன்று வெள்ளலூர் தமுஎகச கிளை யின் சார்பில் பாரதி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.