districts

img

‘ஒன்றிய அரசிடமிருந்து பொதுத்துறையை பாதுகாக்க’

பொதுத்துறை நிறுவனமான இன்சூரன்ஸ் நிறுவனத்தை சூறையாடும் ஒன்றிய அரசிடம் இருந்து இந்நிறுவனத்தை பாதுகாக்க குரல் எழுப்புக என்கிற கோரிக்கையோடு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட நிர்வாகிகள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வ கணபதியை சனியன்று நேரில் சந்திந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்நிகழ்வில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தர்மலிங்கம், கோட்ட பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் கலியபெருமாள், கலைச்செல்வி, கிருத்திகா பிரபா, ஜெயகோபி, அரவிந்தன், ஞானவேல், பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.