districts

img

சாலையோரங்களில் பூத்துள்ள ‘கோடை மலர்கள்’

உதகை, ஏப்.24- சாலையோரங்களில் பூத்துள்ள ‘கோடை மலர்கள்’ சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை நில வுவதால், பல்வேறு வகையான மலர்கள் பூப்பது வழக்கம்.  ஆனால், சிறப்பு வாய்ந்த மே தினத்தை வரவேற்கும் விதமாக,  டிலோனிக்ஸ் தாவர குடும்பத்தை சேர்ந்த சிவப்பு வண் ணத்தில் பூக்கும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மே பிளவர்,  குன்னூர், முதுமலை, கூடலூர் மலைப்பாதையில் பூத்துக்  குலுங்குகின்றன. இது சாலைகளின் இருபுறமும் பசுமை  நிறைந்த மலைகளுக்கு இடையே, தற்போது இந்த சிவப்பு  வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை, புகைப்ப டம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். இது மே மாதத்தில் பூக்கும் இந்த மலர்கள், மாதத்தின் இறுதி  வரை பூத்துக் குலுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும்  வறட்சியால், வனப் பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்க ளில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது. அதே வேளை, கோடை காலத்தில் பொலிவாக காணப்ப டும் ‘கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா’ மலர்கள் பல  இடங்களில் பூத்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து  வருகிறது. இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகள் கூறியதா வது, “சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகள வில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்க ளில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரம்மி யத்தை ரசித்து பயணிக்கலாம்” என்றனர்.