districts

img

‘ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்’

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சிஐடியு தருமபுரி மாவட்ட கே.எம்.ஹரிபட் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராஜகோபால், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டப் செயலாளர் பி.ஜீவா, போக்குவரத்து கழக மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனஸ்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.