ஈரோடு, அக். 6- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மொடக் குறிச்சி - கொடுமுடி தாலுகா 2 ஆவது மாநாட்டில் எம்.சசி தாலுகா செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி - கொடுமுடி தாலுகா 2 ஆவது மாநாடு ஊஞ்சலூர் சமுதா யக்கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, நிர்மலா, சிவலிங்கம் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் ஆர்.முரு கேசன் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத் தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் எம்.சசி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட் டக் குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தாலுகாச் செய லாளர் கே.பி.கனகவேல் வேலை அறிக்கையையும் டி.தங்கவேல் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்த னர். இதில், மொடக்குறிச்சி பாரதியார் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய மாணவர் விடுதி கட்ட வேண்டும். சிவ கிரி பகுதியில் நத்தம் நில வரி திட்டத்தில் முறையான ஆவணங்களை வைத் துள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து நத்தம் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், 9 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டு. அதற்கு, செயலாளராக எம்.சசி தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதியாக, மாநிலக் குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் ஆகியோர் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினர். முடிவில், எம். அண்ணாதுரை நன்றி கூறினார்.