districts

img

இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரிக்கை

திருப்பூர், ஜூலை 5 - ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப் பீடு பிரீமியத் தொகைக்கு ஜிஎஸ்டி வரி  விதிப்பை ரத்து செய்யுமாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. வெள்ளியன்று அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை நிர் வாகிகள், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற  உறுப்பினர் கே.சுப்பராயனை சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர். இதில், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட் டுக்கான பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், வருமான  வரி பிரிவில் 80 சி அல்லாத தனியாக ஒரு  சேமிப்பு பிரிவை இன்சூரன்ஸ் ப்ரீமியத்துக்கு  உருவாக்க  வேண்டும், புது வருமான தாக்கல்  திட்டத்தில் மருத்துவக் காப்பீட்டு பிரீமி யத்தை மொத்த வருமானத்தில் வரி விலக்கில்   சேர்க்க வேண்டும், பொதுத்துறை பொது காப் பீட்டு கழகங்களான நியூ இந்தியா அஸ்யூ ரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட்  இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூ ரன்ஸ் ஆகியவைகளை ஒன்றிணைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நாடாளு மன்றத்தில் எடுத்துரைக்க ஆவண செய்யு மாறு கே.சுப்பராயன் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டனர்.  இந்த சந்திப்பில் திருப்பூர் கிளைச் சங்கத்  தலைவர் ரங்கராஜ், செயலாளர் சஞ்சய் ராஜா  மற்றும் மணியரசு , பிரசன்னா, தினேஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.