பிரபல ரவுடி கட்ட ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை பகுதியில் பிரபல கட்ட ரவுடி மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தசூழலில், கடந்த 2013 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல்நிலையத்தில் ரவுடி ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட கட்ட ராஜா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர்மீதான வழக்கு விசாரணை, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், செந்தில்நாதன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பெஞ்சமின் ஜோசப், தஞ்சையை சேர்ந்த ரவுடி கட்ட ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கட்ட ராஜாவின் கூட்டாளிகளான தாய் மாமன் ஆறுமுகம் மற்றும் தம்பி செல்வம் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.