districts

img

நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி, பிப். 24- 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் மிடுகரப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பின்றி அந்த நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளன. தூண்களில் இருந்தும், தொட்டியில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. நீண்டகாலமாக தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாகவும், அந்த தண்ணீருடன் சிறு பூச்சிகள், புழுக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.