districts

img

தொடரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 29- தொடரும் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் தொட்டபேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தை சேர்ந்த  லகுமப்பா (38). இவருக்கு இரண்டு மனைவி கள், 6 பிள்ளைகள் உள்ளனர். இவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். சில இடங்களில் வெற்றி பெற்றுள்ள தாகவும் தெரிகிறது. ஓராண்டுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வன்னி யர் சமூகத்தினரின் காளையோடு இவரது காளை போட்டி போட்டதில் இருந்து தொடர்ந்து லகுமப்பாவிற்கு மாற்று சமூ கத்தைச் சேர்ந்த தேவராஜ் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி லகுமப்பா இருசக்கர வாக னத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது, அவரை தேவராஜ், சதீஷ், விஜய் ஆகியோர் கடுமையாக தாக்கி யுள்ளனர். லகுமப்பாவின் உற வினர்கள் தடுக்க முயன்ற போது தேவராஜ் தரப்பினர் அவர் களையும் தாக்கியுள்ளனர். மேலும் லகுமப்பாவை உயிர் போகும் வரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியதின் பேரில், தேவ ராஜ், சதீஷ், விஜய் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நகேஷ் பாபு, மாவட்ட துணைத்தலைவர் அனுமப்பா ஆகியோர் கொலை செய்யப்பட்ட லகுமப்பா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கெலமங்கலம் காவல்துறையினரை சந்தித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிந்து கேட்டறிந்தனர். மேலும் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிணையில் வெளியே வரமுடியாத படி வழக்குப் பதிய வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தொடர்ந்து தலித் இளைஞர்கள் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட லாகுமப்பா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.