districts

img

கெலவரப்பள்ளி அணையில் கலக்கும் கழிவுநீர்

கிருஷ்ணகிரி, மே 10- கெலவரப்பள்ளி அணைக்கு வரும் பெங்களூரு நகர கழிவுநீர், தொழிற்சாலை களின் ரசாயன கழிவுநீர் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சூளகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஓசூர் கெலவரப் பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 42 அடிக்கு நீர் தேங்கியுள்ளது. அங்கிருந்து தென் பெண்ணை ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கி றது. ஒரத்தூர் ஏரியில் இருந்து கெலவரப் பள்ளி அணைக்கு வரும் தண்ணீருடன், பெங்க ளூரு மாநகரின் கழிவுநீர், தொழிற்சாலை மற்றும் ரசாயன கழிவுகளும்  கலக்கிறது. இதனால் அணை பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அணையிலிருந்து தென்பெண்ணை யாற்றில் வெளியேறும் நீரில் ரசாயன கழிவு நீரின் நுரை 5 அடிக்கு மேல் மிதந்து செல்கிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வரும் நீர் விவசாயம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு அரிப்பு உள்ளிட்ட பல்வேறு தோல் வியாதி கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். எனவே அணையில் கலக்கும் கழிவு நீர், தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் ஒன்றியச் செய லாளர் ராஜா ரெட்டி கோரிக்கை விடுத்துள் ளார்.