districts

img

தலித் குடியிருப்பு மைதான நிலம் விற்பனை: மோசடி நபர் மீது சிபிஎம் புகார்

கிருஷ்ணகிரி, ஏப். 8- போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி தலித் மக்களின் விளையாட்டு மைதான நிலத்தை விற்பனை செய்த  தேமுதிக முன்னாள் கவுன்சி லரை கைது செய்ய வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியில்  தலித் குடும்பங்க ளுக்கு 2004ஆம் ஆண்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பயனாளிகள் அனைவரும் அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். இந்த பகுதியில்  விளையாட்டு மைதானத் திற்கு 50 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் அங்கன்வாடியும், குடியிருப் புக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டது. மீதமிருந்த இடம் விளையாட்டு மைதா னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேமுதிக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான வடிவேல் போலிப் பட்டா தயாரித்து மைதானத்தின் ஒரு பகுதியை 3 பேருக்கு விற்பனை செய்திருக்கிறார். நிலத்தை வாங்கிய 3 பேரும் தற்போது வீடு கட்டி  வருகின்றனர். மேலும் தொடர்ந்து மைதானம் முழு வதையும் குறுக்கு வழியில் விற்பதற்கும் முயற்சித்து வருகிறார்கள். விளையாட்டு மைதானம் விற்பனை குறித்து குடியிருப் போருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, நிர்வாகிகள் பெரியசாமி, சாந்தமூர்த்தி, விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தன், நிர்வாகிகள் சர்க்கரை, மகாலிங்கம் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று  ஆவணங்களை பரிசோதித்த னர். அப்போது, அரசு ஒதுக்கிய குடியிருப்புக்கான விளையாட்டு மைதானத்தை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மோசடி யில் ஈடுபட்டு வரும் வடிவேல் மீதும், அரசு  அனுமதியின்றி மைதானத் தில் வீடு கட்டுபவர்கள் மீதும்  மாவட்ட ஆட்சியர், வட்ட வளர்ச்சி அலுவலர், ஆதிதிரா விட நலத் துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.