districts

img

அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி, செப். 8- கிருஷ்ணகிரி அருகே கம்பம் பள்ளி அரசு பள்ளி யில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக நாட்க ளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெளியேற வழியில்லா மல் குடியிருப்பு பகுதி களில், பள்ளிகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடி யாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் தொல்லையும் அதி கரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரி வித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோப மடைந்த மாணவர்கள் பள்ளி முன்பு சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தேங்கி யுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;