districts

img

கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூலை 25- தேன்கனிக்கோட்டை வட்ட அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும். நகரின் அனைத்து வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேன்கனிக்கோட்டை வட்ட மாநாடு தெய்வானை தலைமையில் நடைபெற்றது. ராமக்கா கொடியேற்றினார். சகுந்தலா வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி மாநாட்டை துவக்க வைத்தார். மாவட்டத் தலைவர்  வெண்ணிலா, சிபிஎம் தளி ஒன்றியச் செயலாளர் டி.வெங்க டேஷ், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனிவாஸ், ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர் மாதர் சங்க நிர்வாகி  புஷ்பமா தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி மாநாட்டை நிறைவு  செய்து பேசினார். வட்டச் செயலாளர் நாகரத்தினா நன்றி கூறினார். தேன்கனிக்கோட்டை வட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை மேம்படுத்த வேண்டும், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள பெட்ட முகிலாளம் மலைப் பகுதிக்கு  கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும், அந்தேவனப்பள்ளி தொட்டபில்ல முத்திரை வழியாக பாலதோட்ட பள்ளி வரை தார் சாலைகள் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
தலைவராக லலிதா, செயலாளராக நாகரத்தினா, பொருளாளராக சகுந்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.