districts

img

தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்: தலித் மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச. 15- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், திருவண ்்ம்பட்டி அருகே வீரன் வட்டம் குக்கிராமத்தில் 45 தலித் குடும்பங்கள் 25 தொகுப்பு வீடுகளில் வசிக்கின்றனர். இந்த தொகுப்பு வீடுகள் 1991-92இல் இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்க ப்பட்டது. தற்போது வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, மேற்கூரைகள் உட்புறம் பூச்சு கள் அனைத்தும் உதிர்ந்து கம்பி கள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. சிறு மழை பெய்தால்கூட மேற்கூரையில் இருந்து வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகிறது. மேலும் மின் இணைப்புகள் பழுதாகி யுள்ளதால் சுவரைத் தொட்டாலே மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் என அதிகாரி யிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் ெஜயச்சந்திரன்பானு ரெட்டியிடம் மனு அளித்தனர்.