districts

img

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

கிருஷ்ணகிரி, நவ.19- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வரு கின்றன. இந்த குவாரிகளால் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது குவாரிக்கு வரும் வாகனங்களால் சாலை கள் சேதமடைகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.  இம்மாதம் 11 ஆம் தேதி ஊரை காலி செய்து குழந்தைகள், கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.  இதனையடுத்து, அதிகாரி கள், காவல்துறையினர் கிராம மக்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இத னால் 8-வது நாளாக கிராம மக்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  அரசு அதிகாரிகள் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில், மாற்று வழியில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப் படும். பொது மக்கள் மீது போடப் பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதிய ளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.