கிருஷ்ணகிரி, நவ. 10- கிருஷ்ணகிரி வட்டம் கோட்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மகபூப் நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட இஸ்லா மிய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக சேறும் சகதியு மாக காட்சியளிக்கின்றன. முறை யான மழைநீர் வடிகால்வாய்கள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய்கள் இல்லாத தால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துற்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சியில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும், மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அந்த பகுதி மக்கள் சாலை யில் தேங்கியுள்ள நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.