கிருஷ்ணகிரி, ஏப். 6- ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் என தர்மபுரி கிருஷ்ண கிரி விதை ஆய்வு துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் காய்கறி பெருமளவில் பயிரிடப்படுகி றது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை விதைச்சான்று மற்றும் அங்க கச் சான்றுத்துறை மூலம் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் பெற்ற, நிலையங்க ளில் மட்டுமே வாங்க வேண்டும். அதை தவிர்த்து ஆன்லைன் மூலமாகவோ, தனி நபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதை களை வாங்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் விதைகளினால் ஏற்படும் பயிர் பாதிப் பிற்கோ அல்லது இழப்பிற்கோ எவ்வித இழப்பீடும் பெற இயலாது. மேலும் தனி நபர்கள் மூலம் நேரடியாக நாற்றுப் பண்ணை களுக்கு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படும் விதைகளுக்கு, உரிய ரசீது அளிக்கப் படாததால், இந்த விதைகள் போலி விதைகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகளும், நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விதை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விவசாயிகள் அதிக மகசூல் பெற பரு வத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும், விவசாயிகள் விதை களை வாங்கும்போது நாள், விவசாயியின் பெயர், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பம் இட்டு தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.