districts

img

விளையாட்டு மைதானத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்து வரும் நபர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அரசம்பட்டியில் வசிக்கும் தலித் மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த விளையாட்டு மைதானத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் துணை நிற்கும் வருவாய்த் துறையினர் மீது மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் இளவரசன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.