districts

img

குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

காஞ்சிபுரம், மார்ச் 15 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அடுத்து கோடைகாலம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உரு வாகும் என புதியதாக பதவியேற்ற மேயர் மகாலட்சுமி  வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் என வள்ளல் பச்சையப்பர் தெரு, காமராஜர் தெரு மற்றும் சங்கரமடம் எதிரில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடி கழிவு நீரில் கலக்கிறது. இதுகுறித்து பலமுறை  நேரடியாகவும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தாலும் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியா வசியத் தேவைகளில் ஒன்று குடிநீர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் பல  மாதங்களாக காமராஜர் சாலையில் பச்சைய ப்பன் தெருவில் உடைப்பை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.