காஞ்சிபுரம், ஜூன் 29 - காஞ்சிபுரம் அருகே குருவி மலை கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் பருகியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். களக்காட்டூர் ஊராட்சி க்கு உட்பட்ட குரு விமலை கிராமத்தில் கடந்த 10 நாட்களாக எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட் டுள்ளது. முருகன் கோவில் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர்கள், தூய்மை தொழிலாளர்கள், சில பக்தர்கள் என பலருக்கும் இந்த குடிநீர் பருகியதால் உடல்நல குறைவு ஏற் பட்டுள்ளதாக கூறப்படுகி றது. பாலாற்றில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து கலங்கலான குடிநீர் மக்கள் இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதனால் 10 நாட்களுக்கு மேலாக 15க்கும் மேற்பட்ட வர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டும் இது வரையில் சுகாதாரத்துறை கண்டு கொள்ளவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையிட்டதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் போர்க்கால அடிப்படையில் மருத்துவ குழுவை வர வைத்து வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாத்திரை மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நீர் தேக்க தொட்டியை சுத்தப் படுத்தி குளோரின் போடப் பட்டுள்ளது.