காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 951 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத் ரய்யா, மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.