கள்ளக்குறிச்சி, ஜூன் 12 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கு உரிய வேலையை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கோரிக்கை ஏற்கப்பட்டது.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 வேலை கேட்டு நடைபெறுவதாக இருந்த மறியல் போராட்டத்திற்கு முன்னதாக தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 3 வாரங்களுக்குள் பெயர் பட்டியல் அளித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் கட்டாயம் வேலை வழங்கப்படும், பலகச்சேரி, குடிய நல்லூர்,வரஞ்சரம்,தாங்கள், சிறு நாகலூர், நின்னையூர், கூத்தக்குடி, முடியனுர், புதுஉச்சிமேடு, உடையானச்சி ஆகிய கிராமங்களில் பெயர் பட்டியல் அளித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்தார் .
இதனை அடுத்து போராட்டம் தற்காலிக மாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் வி.ராதாகிருஷ்ணன், கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம்,மாவட்டத் தலைவர் பி.வேலு, தியாகதுருகம்ஒன்றிய தலைவர் என்.வைத்தியலிங்கம், கள்ளக்குறிச்சி ஒன்றிய தலைவர் மாயகிருஷ்ணன்,வட்டக் குழு உறுப்பினர்கள் கொளஞ்சி, பெரிய சாமி,சுதா,ரேவதி, பெரியநாயகி,அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.