districts

img

போராட்டத்தால் ரேசன் கடை திறப்பு

கள்ளக்குறிச்சி, பிப். 3- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா உ.செல்லூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ரேசன் கடை அமைக்கக் கோரி வியாழனன்று (பிப்.2) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உ.செல்லூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை பிப்.2 அன்று திறக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கடையை திறந்து வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் கனக பூரணி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.அய்யனார், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கி.ஆனந்தராஜ், தலைவர் எம்.ராஜீவ் காந்தி, சிபிஎம் கிளைச் செயலாளர்கள் சக்கரவர்த்தி, வீரன், சுரேஷ் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.