கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உலுக்கிய மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் புழக்க த்தில் இருப்பதை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா பேசுகையில், தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராய விவகாரத்தில் சாவுக்கு காரணமான காவல்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும், விலைமதிப்பில்லாத உயிருக்கு நிதி உதவி அளிப்பது என்பது தீர்வாகாது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பினை உடனே வழங்க வேண்டும்,
தமிழகம் முழுக்க போதை கலாச்சாரம் பெருகிவரும் சூழ்நிலையை இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு தடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோத கும்பலை கண்டறிந்து தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்றார். இதில் மாதர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் இ.அலமேலு,மாவட்ட செயலாளர் ஏ.தேவி,திருநாவலூர் மேற்கு கமிட்டி செய லாளர் மணிமேகலை,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் ஏ.சீனுவாசன்,மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன்,மாவட்டத் தலைவர் ஆர்.சலீம், சிஐடியு மாவட்டத் தலைவர் சலாவு தீன்,ஓய்வு பெற்றோர் மின் ஊழியர் அமைப்பு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜாமணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.