கள்ளக்குறிச்சி, மார்ச் 31- களமருதூர் ஊராட்சி மக்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைக ளுக்காக சிபிஎம் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் மேற்கு ஒன்றியம் களமருதூர், பெரியார் நகர் பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை (மார்ச் 30) வட்டாட்சியர் க.ராஜி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கே.ஆனந்த்ராஜ், கே.அய்யனார், எஸ்.ஜோதிராமன், கிளைச் செயலாளர்கள் என்.செந்தில், கே.சக்திவேல், நீ.வேலு நிர்வாகிகள் முத்தையன், வெங்கடேசன் மற்றும் திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், களமருதூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்படும். பெரியார் நகரில் 8ஆவது, 9ஆவது வார்டுகளில் வசிப்பவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி பகுதியில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் 2 நாட்களில் அப்புறப்படுத்தப்படும். பெரியார் நகர் மாரியம்மன் கோவில் தெரு, மெயின் ரோடு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை 3 மாதங்க ளுக்குள் அமைக்கப்படும். பெரியார் நகர் பகுதியில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்புகள் அகற்றி, கம்பி வேலி அமைக்கப்படும் என துணைவட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து ராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.