districts

மின்தடை  அவதிப்படும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி,ஏப்.21- அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடிக்கடி மின்தடையால் விவசாயிகள் மிகுந்த பாதிக்கப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மின் வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவ நெல் கொள் முதல் பணிக்கு தடையாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனர். விவசாயிகளுக்கு உதவி செய்யும் உன்னத திட்டமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தங்குதடையின்றி மின்சாரம் வழங்க தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.