கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.