கள்ளக்குறிச்சி, ஜூன் 25- கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பலர் உயிரிழக்க கார ணமான அனைவரையும் கைது செய்யக்கோரியும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத் தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக் குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் செவ்வாயன்று (ஜூன் 25) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு உரை யாற்றினார்.
அவர் பேசுகையில், கள்ளச் சாராய சம்பவத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதற்காக பல கட்சிகள் வேலை செய்து கொண்டி ருக்கின்றன. இந்த சம்பவம் சமூ கத்தில் நடந்துள்ள ஒரு மிகப்பெரிய கொடூரமாகவே சிபிஎம் பார்க்கி றது. ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடும் கருவி யாக இந்த சம்பவத்தை நாங்கள் பார்க்கவில்லை. விஷச் சாரா யத்தை அருந்தி 60க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன் னும் பலர் கவலைக்கிடமாக இருக் கின்றனர். மேலும் இதில் உயிரி ழப்புக்கள் நடக்குமா இல்லையா என்பதை மருத்துவர்களாலேயே கணிக்க முடியாத சூழ்நிலை நிலவு கிறது. அப்படியே அவர்கள் உயிர் பிழைத்து வந்தாலும் கூட அவர்கள் முழு உடல் நலத்துடன் இருப்பார் களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதயத்தை நொறுக்கிய நிகழ்வு
கருணாபுரம் பகுதிக்கு வந்த போது தெருவுக்குத் தெரு ஒவ் வொரு வீட்டிலேயும் பிணங்கள் இருப்பதை பார்க்கிறபோது இத யமே வெடித்து விடும் போல இருந் தது. வயது வித்தியாசம் இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுடைய துணைவியார் இளம் வித வையாக மாறி இருக்கிறார்கள். தாயும் இல்லாமல் தந்தையும் இல் லாமல் ஆதரவற்றவர்களாக குழந் தைகள் மாறி இருப்பதை பார்க்க முடிந்தது. பச்சிளம் குழந்தை களுக்கு என்ன நடந்தது என்றே தெரி யாமல் அவர்கள் விழித்துக் கொண் டிருப்பதை பார்த்தால் கல்நெஞ்சம் படைத்தவர்கள் கூட கலங்கு வார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரி ழந்தவர்களின் குடும்பத்தை காப் பாற்ற வேண்டியது அரசாங்கத்தினு டைய கடமையாக கருதி தமிழக முத லமைச்சர் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருக்கி றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருத்துவமனைகளில் பணி யாற்றுகின்ற மருத்துவர்களை பாராட்டுகிறோம். இரவு பகல் பாரா மல் கடுமையான உழைப்பை செலுத்தி பல உயிர்களை காப்பாற்றி இருக் கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மதுவால் இளம் விதவைகள் அதிகரிப்பு
தமிழகம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் மதுப்பழக்கத்தி னால் இறந்துபோன இளைஞர் களை கணக்கெடுத்துப் பார்த்தால் எத்தனை இளம் விதவைகள் இருக் கிறார்கள்; இந்த மதுவினால் பாதிக் கப்பட்டு தங்கள் வாழ்வை இழந் துள்ளார்கள் என்ற விவரம் தெரிய வரும். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் வெளி உலகத்திற்கு தெரிய வந்த காரணத்தினால் உயிரிழப்புக்கள் எத்தனை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இந்த சாரா யத்தினாலும் போதை பழக்கத்தி னாலும் கஞ்சா புழக்கத்தினாலும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது உலக அளவில் பெரிய வியாபாரமாக மாறியுள்ளது.
சமூகப் பொறுப்பு
குஜராத்தில் இருக்கக்கூடிய அதானி துறைமுகம் வழியாக ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம்கோடி மதிப் பிலான போதைப் பொருள்கள் புழக் கத்திற்கு வருகிறது. இந்த போதைப் பழக்கத்திற்கு பள்ளிக்கூட இளம் மாணவ - மாணவிகள் கூட அடிமை யாகும் சூழ்நிலை நிலவுகிறது. எதிர் காலத்தில் இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி விடு வார்களோ என்ற அச்சம் எழுந்துள் ளது.
மதுக்கடைகளின் நேரத்தை குறைத்திடுக!
கருணாபுரம் பகுதியில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் போதை க்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் களத் தில் இறங்கி போராட வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருந்தாலும் 4 மாநிலங்களில் மட் டும் தான் மதுவிலக்கு என்பது இருக் கின்றது. மீதமுள்ள எல்லா மாநி லங்களிலும் மதுக்கடைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. மதுக் கடைகளை உடனே மூடவில்லை என்றாலும் கூட படிப்படியாக டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும் அதனுடைய எண்ணிக்கைகளை குறைத்துக் கொண்டே வர வேண் டும் மதுக்கடைகளின் வியாபாரத் தின் நேரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும், படிப்படியாக மதுவிலக்கை தமிழ கம் முழுவதும் கொண்டு வருவதற் கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
மணல் வியாபாரத்தை அரசாங் கமே ஏற்று நடத்தலாம்; கனிம வள வியாபாரத்தை மொத்தமாக அர சாங்கமே ஏற்று நடத்தலாம்; எத்த னையோ தொழில் வளங்களை தமி ழகத்தில் பயன்படுத்தலாம். அதை யெல்லாம் பயன்படுத்தினால் அர சாங்க கஜானாவிற்கு பணம் வர வழி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகு தியில் சாராய வியாபாரி கண்ணுக் குட்டி என்கின்ற கோவிந்தராஜ் பின் னால் இருக்கக்கூடிய அரசியல் பலம் வாய்ந்த நபர்களையும் காவல் துறையினர் கைது செய்ய வேண் டும். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரா யம் நீண்ட நாட்களாக காய்ச்சப்படு வதாக கூறப்படுகிறது. கள்ளச்சாரா யம் காய்ச்சுவதற்கு காவல் துறை ஆதரவாக இருக்கலாம் என்று கூறப் படுவதால் சம்பந்தப்பட்ட அனைத்து துறையை சார்ந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் குமார்- ஆனந்தன் என்ற இரண்டு இளை ஞர்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு கள்ளச்சாராய எதிர்ப்பு போரா ட்டம் தான் காரணம். இத்தனை தியா கங்களுக்கு உரித்தான இயக்கம் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கள்ளச் சாராயத்தை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதில் உரிய கவனம் செலுத்தாவிட்டால் ஆட்சி நிர்வா கம் தோற்றுவிட்டது என அர்த்தம் ஆகிவிடும். தமிழகத்தில் இனி எந்த வகையிலும் போதைப் பழக்கத்தை அனுமதிக்க முடியாது. இந்த கோர சம்பவத்திற்கு பிறகாவது கள்ளக் குறிச்சி பகுதியில் இருப்பவர்கள் போதை பழக்கத்தில் இருந்து முற் றிலுமாக மாறித்தான் ஆக வேண் டும். சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், விழுப்புரம் மாவட் டச் செயலாளர் என்.சுப்பிரமணி யன், கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி. சுப்பிரமணியன், எம்.கே.பூவராக வன், எம்.செந்தில், வி.சாமிநாதன், இ.அலமேலு, வி.ஏழுமலை, எம். கே.பழனி, இடைக்குழு செயலாளர் கள் கள்ளக்குறிச்சி வி.ஏழுமலை, சின்ன சேலம் டி.மாரிமுத்து, சங்கரா புரம் எஸ்.சிவாஜி,வெள்ளிமலை கே.அண்ணாமலை, ரிஷிவந்தியம் பழனி, திருக்கோவிலூர் மு.சிவ குமார், உளுந்தூர்பேட்டை வி.ரகு ராமன், ஆர்.சீனிவாசன், பி.சேகர், திருநாவலூர் டி.எஸ். மோகன்,ஜெ.ஜெயகுமார் உள்ளிட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.