districts

img

மாட்டு வண்டியில் பயணம் செய்யும் தம்பதி

உளுந்தூர்பேட்டை,மார்ச் 22- கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் லிவி (25). இவ ருடைய மனைவி அனு ஸ்ரீ. இவர்கள் விவசாயத்தை பாதுகாக்க விழிப்பு  ணர்வு ஏற்படுத்தும் வகை யில் மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கி றார்கள். பின்னர் அங்கு இயற்கை விவ சாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப் போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்து வோம். செயற்கை உரங் களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவ சாயத்தை காப்போம் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த மாட்டு வண்டி பய ணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள திரு நாவலூர் தேசிய நெடுஞ் சாலையில்வந்தபோது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்க ளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைக்க உள்ள  தாகவும், அதன் பின்னர் தலைமைச் செயல கத்தில் முதலமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ள தாகவும் தெரிவித்தனர்.