கடலூர், மார்ச் 14- நெய்வேலி முன்னாள் மாணவர் சங்க நகரச் செய லாளர்முருகன் உடல் நலக்குறை வால் செவ்வா யன்று (மார்ச் 14) காலமானார். தோழர் முருகனின் உடல், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யிலுள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் புதன்கிழமை(மார்ச் 15) மாலை 3 மணிக்கு புறப்பட்டு நெய்வேலி இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. இந்திரா நகர் சிபிஎம் கிளை செயலாளாகவும், இந்திய மாணவர் சங்கம் நெய்வேலி நகர செயலாளராகவும், வாலிபர் சங்க நிர்வாகியாகவும் திறம்பட செயல்பட்டவர் முருகன். அவருக்கு ஆபிலாஷ், ஜீவா இரண்டு மகன் உள்ளனர்.