கடலூர், நவ. 3- வடகிழக்கு பருவமழை தொடங் கிய நிலையில், கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் எனவும் நவம்பர் 8ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவன கிரி, பரங்கிப்பேட்டை கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கி யுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புதன் கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை ஒரே நாளில் 1,309 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 15 செ. மீட்டர் மழை அளவு பதிவானது. தொடர் மழை காரணமாக இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்தார். இரண்டு கால்நடைகள் இறந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்வகைகள் பெரும்பகுதி நீரில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்து வருகிறார்கள். பயிர் பாதிப்புகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.