கடலூர், ஏப். 7- அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக ரூ.70 ஆயிரம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கைக்கு எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.மானம்பாடி திருவள்ளூர் நகரில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த மாரியம்மள் வெள்ளியன்று (ஏப். 7) மனு அளித்தனர். அந்த மனுவில், இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனது கண வர் இறந்துவிட்டார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு சி. மானம்பாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பூராசாமி என்பவர் நாங்கள் குடிசை போட்டு வசித்த இடத்தில் அரசு வீடு கட்டித் தருவதாக சொல்லி, என்னி டம் முதல் தவனணயாக ரூ.30 ஆயி ரம், 2ஆவது தவனணயாக ரூ.40 ஆயி ரம் என ரூ.70 ஆயிரம் வாங்கினார். அதன்படி திருவள்ளுவர் நகரில் எங்க ளுக்கு வீடும் ஒருக்கீடு செய்யப் பட்டது. ஆனால் எங்களுக்கு வீட்டை வழங்காமல், வேறு நபருக்கு ஒதுக்கி விட்டார். எங்களுக்கு ஏன் வீடு வழங்க வில்லை என்று கேட்டதற்கு, என்னை நீ மதிக்கவில்லை, நான் சொல்லு வதை எதையும் கேட்க மறுக்கிறாய். எனவே, உனக்கு வீடு வழங்க முடி யாது. அடுத்த முறை அரசு வீடு வந்தால் தருகிறேன் என்று கூறி னார். சில நாட்களுக்கு முன்பு சிங்காரக்குப்பம் கிராமத்தில் அவர் மூலம் கட்டிய 13 வீடுகளிலும் எனக்கு வீடு வழங்காமல் வெளியூர் நபர்களுக்கு கொடுத்துவிட்டார். என்னிடம் வாங்கிய குடும்பஅட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுங்கள் என பலமுறை கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக ரேசன் அரிசி கூட வாங்க முடியாமல் ஆற்றின் ஓரம் குடிசை போட்டு, மழையிலும் வெயிலி லும் அவதிப்படுகிறோம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, என்னுடைய பணத்தையும் ஆவ ணங்களையும் மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.