நெய்வேலி, நவ. 8- நெய்வேலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமாக பழுப்பு நிலக்கரி (என்எல்சி) இந்திய நிறுவனம் உள்ளது. இங்கு திறந்தவெளி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல் சுரங்கத்தில் நிலக்கரியை வெளியே கொண்டு வரும், கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்தப் பகுதியோ புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.