சிதம்பரம், டிச.14 - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பயில வந்த திருநங்கைக்கு துறை தலைவர் அனுமதி மறுத்தது குறித்து துணைவேந்தரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசனை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், திருநங்கை ரக்ஷிதா ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம் வருமாறு:- கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ரக்ஷிதா (சரத்குமார்). அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை யில் முனைவர் பட்டம் பயில இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேதியல் துறை தலை வர் ெஜயபாரதி,“உனக்கு கைடு (ஆசிரியர்) கிடைப்பது மிக வும் சிரமமாககும். எனவே, வேறு கல்லூரியை தேர்வு செய்து கொள்ளுங்கள்”என்று கூறி யுள்ளார். திருநங்கைகள் முனைவர் பட்டம் பயிலக்கூடாதா? என ரக்ஷிதா கேட்டபோது, ஜெயபாரதி தொலை பேசியை இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர், பல்கலைக்கழகத்திற்கு சென்று நேரில் கேட்டபோது, திரு நங்கைக்கு ஆசிரியர்களை நிய மிக்க முடியாது. நீங்களே ஒரு ஆசிரியரை தேர்வு செய்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி, ஆசிரியர் ஒருவரை திருநங்கை தேர்வு செய்ததையும் துறைத் தலைவர் ஜெயபாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. அடித்தட்டு ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய இந்த பாரம்பரியமிக்க பல்கலைக்கழகத்தில் திருநங்கை ரஷிதா முனைவர் பட்டம் பயில உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி வித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட துணைவேந்தர் ராம.கதிரேசன் இது குறித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்துள்ளார்.