districts

img

சாலை, குடிநீர் வசதி கேட்டு சிபிஎம் போராட்டம்

கடலூர், ஏப். 11- கடலூர் மாவட்டம் வண்டிப் பாளையம் பகுதியில் இருந்து புருகிஷ்பேட்டை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்,  அந்த சாலையில் உள்ள பாலத்தை இடித்து  புதிய பாலம் அமைக்க வேண்டும், காந்திநகர்  பகுதியில் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆர்ப்பாட்டமாக நடத்தி கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதனப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போது, சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, வட்டாட்சியர் விஜய் ஆனந்த், காவல்  துறை ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை ஒரு மாத காலத்தில் நிறைவேற்றுகிறோம் என்றும், குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து  வைக்கின்றோம் என்றும் கூறினர். மேலும் சேதமடைந்த சாலையை ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட்டனர். வார்டு செயலாளர் மனோகர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர்   செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீ ரான், மாநகர குழு உறுப்பினர்கள் கருணா கரன், சாந்தகுமாரி, நாராயணன், பகுதிச் செயலாளர் முருகன், சிவகாமி, பாலு, ராஜவேலு, முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.