உதகை, நவ.27- கூடலூர் வனசரகத் துக்குட்பட்ட செலுக் காடி பகுதியில் புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனசரகத்துக்குட்பட்ட செலுக் காடி பகுதியில் காப்புக் காட்டை ஒட்டி புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையின ருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூடலூர் டிஎஃப்ஓ வெங்க டேஷ் பிரபு, கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப் போது உயிரிழந்தது 3 வயது ஆண் புலி என்பதும், அடையா ளம் தெரியாத நபர்கள் வனவிலங்கை வேட்டையாட சுருக்கு கம்பிவைத்துத்துள்ளதும், அதில், புலி சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, புலி இறந்து கிடந்த இடத்தில் உள்ள தனி யார் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் காலனி மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.