districts

img

உடுமலை: செப்.8,9-இல் சாலை பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு

சாலை பணியாளர் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 8,9 தேதிகளில் உடுமலையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் உடுமலைப்பேட்டை  எஸ் வி புரம் விஜயா மஹாலில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

செப்டம்பர் 9 ஆம் தேதி உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பிருந்து சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணியாக உடுமலைப்பேட்டை நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாராபுரம் ரோடு தாஜ் தியேட்டர் எதிரில் மிகப்பெரும் அளவிலான பொது மாநாட்டு நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .