கோபி, டிச.6- கிணற்றையொட்டி செல்லும் சாலை சிதலமடைந்து உள்வாங்கி பல மாதமாகியும் நடவடிக்கை எடுக்காததால், விபத்து ஆபத்தை உணராத நிர்வாகத்தின் செயல் பொதுமக் களை முகம்சுழிக்க வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே அந்தி யூர் - கோபி செல்லும் நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் ச.கண பதிபாளையத்தில் நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள விவசாய கிணறு பகுதியில் குறுகிய சாலையாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபி - அந்தியூர் சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொட்டிபாளையம் பிரிவு முதல் அத்தாணி வரையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. இதில் நெடுஞ்சா லையையொட்டி இருந்த கிணற்றுக்கு தடுப்பு கள் அமைக்காமல் சாலை அமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ் சாலையையொட்டி கிணற்று பகுதியில் சாலை சிதலமடைந்து சாலையில் விரிசல் ஏற் பட்டது. இதனால் கிணற்றையொட்டி செல் லும் வாகனங்கள் விபத்துகள் ஏற்பட்டு கிணற் றில் பாயும் அபாயும் ஏற்பட்டுள்ளது. வாகனங் கள் எச்சரிக்கையாக செல்ல தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலை குறுகியாக மாறியது.
இதனால் இரவு நேரங்களில் வரும் வாக னங்கள் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட்டு வருவதாலும், சாலையையொட்டி இருபுறமும் குடியிருப்புகள் உள்ளதால், இது குறித்து அப்பகுதியினர் துறைசார்ந்தவர்க ளுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் வரும் வாகனங்களால் விபத்து கள் ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் அல்லது கிணற்றில் பாயும் சூழல் நிலவி வருகிறது காலை மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தை கள் கிணற்றையொட்டி உள்ள குறுகிய நெடுஞ் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்ற னர். எனவே பெரிய விபத்துக்கள் நடக்கும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.