districts

img

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் காலதாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்

ஈரோடு, ஆக. 4- ஈரோடு ஆட்சியர் அலு வலகத்தில், அத்திக்கடவு அவி நாசி திட்டம் குறித்து அதிகாரி யுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு. முத்துசாமி தலை மை தாங்கினார். ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ. சாந்தகுமார் ஆகியோர் முன்னி லை வகித்தனர். பின்னர் அமைச்சர் முத்து சாமி அத்திக்கடவு -அவிநாசி  திட்டம் குறித்து செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த  திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள் ளனர். ஆட்சியர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முத லமைச்சர் அறிவுறுத்தினார்.  அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று  நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

இந்த பகுதிகளில் நிலம்  கையகப்படுத்த 3 பம்பிங் நிலை யங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அர சின் சார்பில் நேரடியாக விவசாயி களிடம் பேசி விவசாயிகளின் வீடு களுக்கு சென்று பேசி நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனு மதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திமுக அரசுதான் காரணம். விவ சாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறை யால் திட்டத்தை செயல்படுத்து வதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் முதல் கட்டத்தி லேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.  பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுத லாக தண்ணீர் வரும் போது  திட்டம் முழுமையாக செயல் பாட்டுக்கு வரும். இப்போது திட்டம் தொடங்கி வைக்கப் படும்.  1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர் களுக்கான நிதியை வழங்கு வதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் தற்போது 100 விவசாயி களுக்கு மட்டுமே நிலத்திற்கு தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசி விட்டோம் இந்தப் பணி விரைவில் முடிந்து விடும். தண்ணீர் திறப்பதற்கு முன்பு அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்போது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. இவ்வாறு அமைச்சர் கூறி யுள்ளார்.